Posts

Showing posts from June, 2022

சுந்தரமான மனிதராவதற்கு

Image
  உலகில் வாழும் எல்லா உயிர்களும் சுகமாக வாழ்வதற்கே விரும்புகின்றனர். அழுது புலம்பி கவலையுடனும் வேதனையுடனும் வாழ்வதற்கு யாருமே விரும்பமாட்டார்கள். ஒரு சொல்லால் கூட துன்புறுவதற்கு யாரும் விரும்பமாட்டார்கள்.  இயற்கையின் எழுதப்படாத விதி நாம் எதை கொடுக்கின்றோமோ, எந்த வார்த்தைகளை பிரயோகிக்கின்றோமோ, எத்தகைய எண்ணங்களை நினைக்கின்றோமோ அதுவே எமக்கு பன்மடங்காக திரும்பக்கிடைக்கும் என்பது இயற்கையின் எழுதப்படாத விதியாகும். கர்மம், வினை, ஊழ் என்றெல்லாம் இயற்கையின் இவ் விதியே அழைக்கப்படுகின்றது. இந்த விடயத்தை அல்லது இந்த இயற்கையின் நீதியை ஏற்று அதன்படி நடந்துகொள்பரது அகவாழ்வில் பென்னம் பெரிய புரட்சியே நிகழும். நீங்கள் எதை பெற விரும்புகின்றீர்களோ அதனை ஏனையோருக்கு கொடுப்பதற்கு முற்படுவீர்கள். நம்ப முடியுமா?  தன்னை உவமையாகக் கொண்டு. எம்மை யாராவது ஏளனம் செய்தால், அவமானப்படுத்தினால், ஏசினால், திட்டினால், அடித்தால், துன்புறுத்தினால் நாம் சந்தோஷப்படுவோமா? இல்லை. யாரேனும் எம்முடன் சிரித்து பேசுவதாக இருந்தால், எம்மை புகழ்ந்து பேசினால், எம்மை பாராட்டினால், எமக்கு பரிசுகள் அளித்தால் நாம் மிகவும் சந்...
Image
                      புத்த பகவான் எனும் நிகரற்ற மாமனிதரை மூல கர்த்தாவக கொண்டு உலகெங்கும் பரவிய உத்தம மதமே புத்த தர்மம் எனப்படுகிறது. அந்த பௌத்த தர்மத்தை பின்பற்றுபவர்கள் தம் ஒரே மாபெரும் தலைவரான அந்த கௌதம புத்த பகவான் இற்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன் பயன்படுத்திய பொருட்களைக்கூட பெரும் புனித பொருட்களாக கருதி வணங்குவர். இத்தகைய பின்னணியில் புத்த பகவான் மொழிந்தருளிய எண்பத்து நான்காயிரம் தர்ம போதனைகளின் ஸ்பரிசத்தை பெற்ற, திருவாயில் வீற்றிருந்த உத்தம பற்தாதுவை தம் உயிரிலும் மேலாக கருதி வணங்குகின்றர். இவர்கள் அந்த புனித பற்தாதுவின் மீது கொண்டுள்ள மாபெரும் மரியாதையை பற்தாதுவை சுட்டுவதற்காக 'தன்த தாது உத்தமர், தளதா ஹாமுதுருவோ' தளதா உத்தமர் ' போன்ற மாமரியாதைக்குரிய சொற்களை பயன்படுத்தி சுட்டுவதன மூலம் எம்மால் ஓரளவேனும் புரிந்துகொள்ள முடியும். அந்த புனித பற்தாது உத்தமருக்கு மாபெரும் சக்கரவர்த்தி மன்னரை போன்று பாவனை செய்து மாபெரும் பூஜைகள் நிகழ்த்துவதன் மூலமும் கலையம்சங்கள் பொருந்திய ஊர்வலங்களில் கொண்டு செல்வதன் மூல...