சுந்தரமான மனிதராவதற்கு
உலகில் வாழும் எல்லா உயிர்களும் சுகமாக வாழ்வதற்கே விரும்புகின்றனர். அழுது புலம்பி கவலையுடனும் வேதனையுடனும் வாழ்வதற்கு யாருமே விரும்பமாட்டார்கள். ஒரு சொல்லால் கூட துன்புறுவதற்கு யாரும் விரும்பமாட்டார்கள். இயற்கையின் எழுதப்படாத விதி நாம் எதை கொடுக்கின்றோமோ, எந்த வார்த்தைகளை பிரயோகிக்கின்றோமோ, எத்தகைய எண்ணங்களை நினைக்கின்றோமோ அதுவே எமக்கு பன்மடங்காக திரும்பக்கிடைக்கும் என்பது இயற்கையின் எழுதப்படாத விதியாகும். கர்மம், வினை, ஊழ் என்றெல்லாம் இயற்கையின் இவ் விதியே அழைக்கப்படுகின்றது. இந்த விடயத்தை அல்லது இந்த இயற்கையின் நீதியை ஏற்று அதன்படி நடந்துகொள்பரது அகவாழ்வில் பென்னம் பெரிய புரட்சியே நிகழும். நீங்கள் எதை பெற விரும்புகின்றீர்களோ அதனை ஏனையோருக்கு கொடுப்பதற்கு முற்படுவீர்கள். நம்ப முடியுமா? தன்னை உவமையாகக் கொண்டு. எம்மை யாராவது ஏளனம் செய்தால், அவமானப்படுத்தினால், ஏசினால், திட்டினால், அடித்தால், துன்புறுத்தினால் நாம் சந்தோஷப்படுவோமா? இல்லை. யாரேனும் எம்முடன் சிரித்து பேசுவதாக இருந்தால், எம்மை புகழ்ந்து பேசினால், எம்மை பாராட்டினால், எமக்கு பரிசுகள் அளித்தால் நாம் மிகவும் சந்...